அரசு பள்ளி ஆண்டு விழா

 

திருச்செங்கோடு, மே 1: திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை உமா இந்துமதி தலைமை வகித்தார். ஆசிரியர் மாதேஸ்வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு, தேர்வு மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் பிரபுக்குமார், நகர் மன்ற உறுப்பினர் மைதிலி காந்தி, சினேகா ஹரிகரன், தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை கிரிஸ்டினா நன்றி கூறினார்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: