இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,870க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது. விலை உயர்வை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏழை, நடுத்தர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வு ரூ.53 ஆயிரத்தை தாண்டியது சவரன் appeared first on Dinakaran.