அதிகாலை 4 மணியளவில் ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா படுகாயமடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார். மேலும் மின்கம்பம் உடைந்து சாய்ந்தது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உஷாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்கம்பத்தில் கார் மோதி பெண் எஸ்ஐ படுகாயம் appeared first on Dinakaran.