குப்பை எரிக்க தடை கோரிய மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை

மதுரை: தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி பள்ளி அருகே குப்பைகளை எரிக்க தடை கோரிய வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் செல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். குமாரகிரியில் பள்ளி அருகே குப்பைகளை எரிப்பதால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

The post குப்பை எரிக்க தடை கோரிய மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: