வானிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் காரணத்தினால் விண்கல சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் வானிலை காரணமாக சோதனை ஓட்டம் மேலும் தாமதம் அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து புறப்பட்ட ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17 கிலோமீட்டர் என்ற இலக்கை சென்றடையும். அதன் பிறகு அதில் பொருத்தப்பட்டுள்ள விண்கலம் தனியாக பிரிந்து வங்க கடலில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் செயல்பாடுகளும், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
The post ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட முக்கிய சோதனை ஓட்டம்: வானிலை காரணமாக 8.45 மணிக்கு ஏவப்படும் என இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.