சரக்கு ரயில்கள் தடம் புரண்டது

2

ராயக்கோட்டை: தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 100 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று பெங்களூருக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. நேற்று அதிகாலை சுமார் 2.10 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு முன்னதாக எதிர்கோட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கரம் சத்தம் கேட்டது. இந்த விபத்தால் பல ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மகேந்திரவாடி ரயில் நிலைய லூப்லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுக்கு நேற்று காலை அதன் இன்ஜின் அகற்றப்பட்டு வேறு ஒரு இன்ஜின் பொருத்தப்பட்ட வரவழைக்கப்பட்டது. சரக்கு ரயிலுடன் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயிலின் கடைசி பெட்டியில் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

The post சரக்கு ரயில்கள் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: