சிக்கன், மட்டன் பிரியாணி, ஆனியன் ரைத்தா ஆகியவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். ஏ.சி.யில் வைக்கப்பட்டிருந்த பால், தயிர் உள்பட ஓட்டல் முழுவதும் ஆய்வு செய்தனர். ஓட்டல் நிர்வாகத்துக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறும்போது, ‘’ ஓட்டலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டால் உடனே உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுங்கள். புகாரை தெரிவிக்க வாட்ஸ் அப்பில் அனுப்பினால் போதும் விரைந்துவந்து பிரச்னை தீர்க்கப்படும். சமூகவலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டால் எப்படி தெரியவரும். எனவே, வாடிக்கையாளர்கள் முறையாக உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கவேண்டும்’ என்றனர்.
The post உணவில் புழுக்கள் இறந்துகிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணி ஓட்டலில் திடீர் சோதனை appeared first on Dinakaran.