மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 120 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது.  இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: