நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. தேவநாதன் உள்பட 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

The post நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: