இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,”நாளுக்கு நாள் விளைநிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம். நிலத்தையும் மழையையும் மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளை தடுத்தால் எப்படி?. காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?. புன்செய் நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன; எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் -வளர்ப்பதால் ஏரிகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,”இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
The post ஆக்கிரமிக்கும் யூகலிப்டஸ் மரங்கள்.. எதிர்காலத்தில் உண்ணவே உணவு இருக்காது : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!! appeared first on Dinakaran.