நாடாளுமன்ற கூட்டம் முடித்துவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக குடியரசு தலைவர் முர்மு அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு முடிவடைவதால் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கியது.

இதில் 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவை கடந்த 21ம் தேதியும், மக்களவை கடந்த 22ம் தேதியும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் குளிர்கால கூட்டத்தை முடித்து வைப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று அறிவித்தார்.

The post நாடாளுமன்ற கூட்டம் முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: