இதனால் பொதுமக்கள் அதிகளவில் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில் கால்நடைகளும், பொதுமக்களுக்கும் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தை தொடும் பட்சத்தில் விபத்து ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மின்சாரத்துறை அலட்சியத்தால் இரண்டு தினத்திற்கு முன் உயர் மின் கசிவு காரணமாக ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செடிகள் படர்ந்து இருந்ததால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மின் கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மின் கம்பத்தை பற்றிப்படர்ந்த கொடிகள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.