×

நகை பறித்த மின்வாரிய ஊழியர் போலீசை பார்த்ததும் தற்கொலை

நாகர்கோவில்: நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஜோசபின் தாமஸ் (68). இவர் கடந்த 10ம் தேதி காலை நேசமணிநகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின்படி நேசமணிநகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நகை பறித்தது நாகர்கோவில் கட்டையன்விளையை சேர்ந்த சாந்தகுமார் (52) என்பது தெரியவந்தது. இவர் வல்லன்குமாரன்விளை மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கடந்த 10ம் தேதி கட்டயன்விளை பகுதிக்கு தனிப்படை போலீசார் அவரை பிடிக்க சென்றபோது தப்பிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமார்த்தலிங்கபுரம் அன்பு இல்லம் அருகே சாந்தகுமார் நண்பர்களுடன் சீட்டுவிளையாடிக்கொண்டு இருந்தார். அவரை கைது செய்ய அங்கு தனிப்படை போலீசார் 2 பேர் சென்றனர். அவர்களை பார்த்ததும் பயந்துபோன சாந்தகுமார் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷமாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

The post நகை பறித்த மின்வாரிய ஊழியர் போலீசை பார்த்ததும் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Josephine Thomas ,Neshamaninagar ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...