×

நகை திருட்டு வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது

சிவகாசி : சிவகாசி அருகே நகை திருட்டு வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.சிவகாசி அருகே பொதிகை நகரில் கண்ணன் என்பவரது வீட்டில் கடந்த 2010ம் ஆண்டு 3 பவுன் நகை காணாமல் போனது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்த கணேசன்(40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் சிவகாசி கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் தொடர்புடைய கணேசனை கைது செய்து மீண்டும் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணேசனை சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தனிப்படை அமைத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

Tags : Sivakasi ,Jewel ,Kannan ,Pothigai City ,
× RELATED டிஜிட்டல் கைது என்று கூறி சென்னை...