பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீஷியன் சீரியஸ்

பூந்தமல்லி: கே.கே.நகர் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் ஒருவர், உடல் முழுவதும் எரிந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளப்பாக்கம் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (58). இவர் கே.கே.நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல், விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்துவர்கள் விஜயகுமாரை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயம் 41 விழுக்காடு இருந்ததால், டாக்டர்கள் பரிந்துரைப்படி விஜயகுமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீஷியன் சீரியஸ் appeared first on Dinakaran.

Related Stories: