மின் நுகர்வோர் கூட்டமைப்பு அக்.16ல் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அக்.16ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் சிறு குறு‌ மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின் கூட்டமைப்பினர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி அக்டோபர் 16ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மின் நுகர்வோர் கூட்டமைப்பு அக்.16ல் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: