கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். நடிகர் சங்கத் தலைவராகவும் – எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் – அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் – தேமுதிக தொண்டர்கள் – நண்பர்கள் – திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: