இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. இதையடுத்து மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடப்பு மாதத்திற்கான தொகையை முன்னதாகவே வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு மகளிர் தங்கள் செலவுகளை செய்ய வசதியாக முன்கூட்டியே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.10 வரவு வைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால் 10ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
The post தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நவ.10ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வரவு வைக்க தமிழக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.