சில மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது உட்கட்சி பிரச்சனை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: சில மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது உட்கட்சி பிரச்சனை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்தி வருகிறோம்; மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தேர்தல் வரும்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அதிமுக தெளிவுபடுத்தும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; நேரம் வரும்போது கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம் என்று பழனிசாமி குறிப்பிட்டார்.

The post சில மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது உட்கட்சி பிரச்சனை: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: