இந்த கூட்டத்தில் 15வது நிதி குழு மானியத்தின் மூலம் 21- 22 மற்றும் 22-23 ஆகிய வருடங்களில் ஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெபபாலன் அறிவுறுத்தினார். ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர்களின் பகுதிகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் கால்வாய், தெருவிளக்கு வசதி உள்பட அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்ற ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.7 லட்சம் வீதம் 18 கவுன்சிலர்களுக்கும் ரூ.1 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தெரிவித்தார்.
The post வளர்ச்சி பணி நிறைவேற்ற ரூ.1 கோடியே 26 லட்சம்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.