தன்னையே கடவுள் அவதாரமாக மாய தோற்றத்தை நம்பும் ஒருவர், மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் பல நூறு பேர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை கண்டு நேரில் சென்று ஆறுதல் சொல்லாதவர், குஜராத்தில் பில்கிஸ் பானுவுக்கு அநீதி இழைத்த குற்றவாளிகள் வெளியே வந்து விடுதலை வெற்றியை கொண்டாடிய அரக்கர்களை கண்டிக்காதவர், ஆண்டுக்கணக்கில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ளாதவர், பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்தான நிலையிலும் உதவாத ஒரு மனிதரை மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாது.
நாடு சுதந்திரம் பெற 17 ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவையும், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இந்த மண்ணில் ரத்தம் சிந்திய இந்திரா காந்தியையும் மோசமாக விமர்சிக்கும் மோடி கூட்டத்துடன் எப்படி கூட்டாளியாக இருக்க முடியும்? நாட்டின் சுதந்திரத்துக்காக சிறு துரும்பையும் எடுத்துப் போடாத, சிறைக்கு பயந்து வெள்ளையனிடம் கடிதம் கொடுத்த சங்பரிவார் கூட்டத்துடன் எப்படி முழுமையாக சங்கமிக்க முடியும்? இந்த நாட்டின், அனைத்து வளர்ச்சிக்கும், கட்டுமானத்துக்கும் யார் காரணம்? ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு வாய் கூசாமல் மோடியின் கூட்டம் பேசுவதை ஏற்பது எந்தவித அரசியல் அறம்? நாமும் ஒன்றாகத்தானே பயணித்திருக்கிறோம்? எனவே, சிந்தாந்தங்களை சிதறவிட்டு விட்டு சிந்திப்பது இயலாது. அடிப்படையான அரசியல் பண்புகளை விடமுடியாது. எனவே, இயக்கத்தில் இருந்துகொண்டு நெருஞ்சி முள்ளாக தலைவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல், தமாகாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறேன். இது எனக்கு மிகவும் வருத்தமான முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.