இந்நிலையில், சென்னை – மொரீசியஸ் – சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விமான சேவை இயக்கப்பட்டது. 2020ல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை – மொரீசியஸ் – சென்னை இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் சென்னையில் இருந்து, டெல்லி, மும்பை, துபாய் போன்ற இடங்களுக்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலமாக மொரீசியஸ் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சென்னை – மொரீசியஸ் – சென்னை இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்த வாராந்திர முதல் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை முதல் இயக்கப்பட்டது. மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் விமான நிலையத்திலிருந்து 245 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் மொரிஷியஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இயங்க தொடங்கிய, ஏர் மொரீசியஸ் விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் மொரீஷியஸ் பயணிகள் விமானம், மீண்டும் நேற்று அதிகாலை 3.35 மணிக்கு மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தின் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள் எனவும், கட்டணம் ₹26,406 என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட சென்னை – மொரீசியஸ் விமான சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.