காரல் மீன் சொதி

தேவையானவை:

காரல் மீன்- அரை கிலோ,
தேங்காய்- அரை முடி,
பச்சை மிளகாய்- 3,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம்- 1,
சின்ன வெங்காயம்- 5,
கறிவேப்பிலை, உப்பு,
எண்ணெய்-
தேவையான அளவு.

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய்ப் பாலுடன், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய்ப் பாலை, சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்றவாறு பிழிந்து விடவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்து சொதியில் ஊற்றினால் சூப்பரான சுவையான காரல் மீன் சொதி தயார்.

The post காரல் மீன் சொதி appeared first on Dinakaran.