இதனால் கூடுதலாக வசூல் செய்யப்பட்டரூ.1 மற்றும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்குமாறு, கடந்த 2019ல் பாலசுப்பிரமணியம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், பயணியிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது, நேர்மையற்ற வணிக நடைமுறை, வழக்கு தாக்கல் செய்தவருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு ரூபாயையும் மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும், வழக்கின் செலவு தொகையாகவும்ரூ.5 ஆயிரத்தை, 4 வாரத்திற்குள் அரசு போக்குவரத்து நிறுவனம் வழங்க வேண்டும் என நேற்று தீர்ப்பளித்தனர்.
The post அரசு பஸ்சில்ரூ.1 கூடுதலாக வாங்கியதால்ரூ.5,000 அபராதம்: நுகர்வோர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.