இதனிடையே கடந்த 2 நாட்களாக திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் காலை 7 மணி வரை பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் ராம்ஜிநகர், பிராட்டியூர், கள்ளிக்குடி, புங்கனூர் பகுதிகளில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழை அரை மணி நேரத்துக்கும் ேமலாக நீடித்தது. ஆனால் அருகில் உள்ள கருமண்டபம் மற்றும் மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், பொன்னகர் பகுதிகளில் மழை பொழியவில்லை. மாறாக வெயில் அடித்தது. பிராட்டியூரில் மழை பெய்ததும், 2.5 கிமீ தொலைவில் உள்ள கருமண்டபத்தில் மழை பொழியாததும் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
The post 2.5 கிமீ இடைவெளியில் வித்தியாசமான பருவநிலை: கருமண்டபத்தில் ‘வெயில்’ பிராட்டியூரில் ‘மழை’ appeared first on Dinakaran.