– போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.
இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா!உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்!
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்…அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களை சென்றடைய உதவிட வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.