காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை : சென்னையில் உள்ள காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் முக்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருடர்கள் சுவர் ஏறி குதித்து இரவில் திருடினால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.

ஆளுநருக்காக சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை. வேறு பணிகள் இருந்ததால் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதிமுகவின் வாக்குகள் இன்னும் குறையத்தான் செய்யும்; இருக்கின்ற வாக்குகளை அவர்கள் தக்க வைத்தால் போதும். அதிமுக ஐ.டி. விங் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. பாஜகவை எதிர்த்ததால் மனோ தங்கராஜ் பதவி பறிப்பு, ஆளுநருடன் மோதல் போர்க்கால் பொனமுடி பதவிமாற்றம் என்பது தவறு,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: