இதையடுத்து, இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28ம் தேதி புகார் அளித்தார். புகாரில் செய்தி நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பாஜ மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில் அரசு அதிகாரியான கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை காலையும், மாலையும் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் எஸ்.ஜி.சூர்யாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரம் பாஜ பிரமுகர் சூர்யாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.