செய்யாறு அண்ணா அரசுக்கல்லூரி கழிவறையில் பாம்புகளால் மாணவ, மாணவிகள் அச்சம்


திருவண்ணாமலை: செய்யாறு அண்ணா அரசுக்கல்லூரி கழிவறையில் குவிந்து கிடக்கும் பாம்புகளால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் கல்லூரி கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர். கழிவறை அமைந்துள்ள பகுதி புதர்மண்டிக் கிடப்பதாக மாணவ, மாணவிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கழிவறைகளை உடனடியாக தூய்மைப்படுத்தவும், தூய்மைப் பணியாளர்களை கொண்டு பராமரிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post செய்யாறு அண்ணா அரசுக்கல்லூரி கழிவறையில் பாம்புகளால் மாணவ, மாணவிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: