இதற்கிடையே கடந்த சனிக்கிழமை (மார்ச் 1ம் தேதி) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940க்கும் விற்பனையானது. ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையானது. இந்நிலையில் நேற்று (மார்ச் 3ம் தேதி) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.7,940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 107க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.
