இந்த சூழ்நிலையில் சென்னையை சுற்றியுள்ள துறைமுகம், சிபிசிஎல், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களை உடனடியாக போர் நடைபெறும் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மூன்று கம்பெனிகள் ஒரு கம்பெனிக்கு 92 பேர் என மூன்று கம்பெனிக்கு 276 வீரர்கள் ரயில் மூலம் நேற்று புறப்பட்டனர். தொடர்ந்து, போர் பதற்றம் அதிகமானால் இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள பகுதியில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் தெரிவித்தார்.
The post மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 276 வீரர்கள் ரயிலில் காஷ்மீர் பயணம் appeared first on Dinakaran.
