×

தமிழகத்தில் பா.ஜ. வளர்ந்துவிட்டதாக ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்துகிறார்: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: சென்னை ஓட்டேரி குயவர்பேட்டையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ வளர்ந்துவிட்டதை போன்ற மாயத்தோற்றத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்படுத்துகிறார். பாஜ எவ்வளவு தான் மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜ வளர்ந்து விட்டது என கூற முடியாது. பாஜ ஒரு சுமை என்ற காரணத்தினால் கட்சி தொண்டர்களின் விருப்பப்படி பாஜ அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். பத்தாண்டு ஆட்சியில் ஒன்றிய சர்க்கார் தேனும் பாலும் ஓடுகின்ற அளவிற்கு ஆட்சி செய்து விட்டார்களா, நாங்கள் அதனை மக்களிடம் கொண்டு செல்வோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்து சொல்வோம்.

The post தமிழகத்தில் பா.ஜ. வளர்ந்துவிட்டதாக ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்துகிறார்: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,AIADMK ,minister ,Jayakumar ,CHENNAI ,MGR ,Otteri Kuyavarpettai ,Annamalai ,
× RELATED நெல் கொள்முதல் விலையை உயர்த்தி...