பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து நாளை முதல் முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களில் உள்ள பாசன நிலங்களுக்காக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை ஆணையிட்டுள்ளது. நாளை முதல் நவ.8-ம் தேதி வரை 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானியில் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: