பின்னர், ரமேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ரமேஷ்க்கும் அவரின் மனைவியும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர் என்று தெரியவந்தது. அதோடு ரமேஷ் மனைவியுடன் ராமகிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பதாக ரமேஷ் சந்தேகப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் ராமகிருஷ்ணாவிற்கு தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ராமகிருஷ்ணா விமான நிலையத்தில் வேலை செய்வதை தெரிந்து கொண்டு ரமேஷ் கத்தியுடன் காலையிலேயே விமான நிலையத்திற்கு வந்து இக்கொலையை செய்துள்ளார்.
The post பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!! appeared first on Dinakaran.