முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டில் படிக்கும் புதிய மாணாக்கர்கள் உதவித்தொகைக்கு பதிவுசெய்ய https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login இல் சென்று, ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தையோ அணுகவும்.
The post பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.