இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அசாம் ரைபிள்ஸ் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. நிலைமை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டுள்ளதால் 5ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் 6 மாவட்டங்களில் அசாம் ரைபிள்ஸ் appeared first on Dinakaran.