இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ஜூன் 4 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைகளில் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) நடந்த விசாரணையிலும் ராகுல்காந்தி ஆஜராகவில்லை. இது அவர் நேரில் ஆஜராகத் தவறிய ஐந்தாவது முறையாகும்.
தொடர்ந்து அவர் ஆஜராகாதது, இந்த வழக்கின் சட்ட ரீதியான சிக்கலை அதிகரித்துள்ளது. ராகுல் காந்தி தொடர்ந்து ஆஜராகாததைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ராணுவத்தை அவமதித்த வழக்கு; 5வது முறையாக ஆஜராகாத ராகுல் காந்தி appeared first on Dinakaran.
