ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஸ்பீடு செல்வம் என்பவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஸ்பீடு செல்வம் என்பவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கும் சம்பவம் செந்திலுக்கும் தகவல் பரிமாற்றம் செய்யும் பள்ளிக்கரணை ஸ்பீடு செல்வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தாதாவும் ஆயுள்தண்டனை சிறைவாசியுமான வியாசர்பாடி நாகேந்திரனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாசர்பாடி நாகேந்திரனின் காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஸ்பீடு செல்வம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகேந்திரனுக்கும் சம்பவம் செந்திலுக்கும் இடையில் ஸ்பீடு செல்வம் என்பவர் பாலமாக செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஸ்பீடு செல்வம் என்பவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: