இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நேற்று காலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாடுவதை புதுகொத்துக்காடு மற்றும் இண்டியம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்ததாக தெரிவித்ததால் சிறுத்தை அரியப்பம்பாளையம் பகுதியை விட்டு தெற்கு பகுதிக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: சிறுத்தை நடமாடியதாக கூறப்பட்ட விவசாய தோட்டங்களில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் பதிவான கால் தடங்களை ஆராய்ந்ததில் இப்பகுதியில் நடமாடியது சிறுத்தை குட்டியாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி கரும்பு தோட்டங்களில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே சிறுத்தை நடமாடியதாக கூறப்படும் விவசாய தோட்டங்களில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கேசிபி இளங்கோ, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன், பேரூர் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
The post அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.