நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

 


டெல்லி: நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மகேஷ் குமாத் என்பவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

The post நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறிய வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: