மேலும் 32 ஆலோசகர்களை பணியமர்த்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஷீட் தலைநகருக்கான கட்டுமானம் தொடர்பாக கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். ஷீட் தலைநகர் அமைப்பது தொடர்பாக சிங்கப்பூர் அரசின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளோம். கிருஷ்ணா நதி ஓரத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க முடிவு செய்துள்ளோம். கிருஷ்ணா நதியை ஒட்டி நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 8352.69 சதுர கிலோ மீட்டர் அமராவதி தலைநகர் பகுதி இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட உள்ளது. அமராவதியில் உள்ள சாலைகளை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணா நதி மத்தியில் 6 ஐகானிக் பாலங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதி அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.