இதில் சார்பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய மணல்மேடு அடுத்துள்ள தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீட்டில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் 4 போலீசார் போலீசார் காலை 8 மணி முதல் 11 மணி வரை சோதனை நடத்தினர். இதே போல், கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் உள்ள ரகு மற்றும் பத்திர பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட முனியநாதனூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளிலும் 10க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் காலை 8 மணி முதல் 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர். நில அபகரிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சோதனை நடந்த 3 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, விஜயபாஸ்கர் ஆதரவாளரான கரூரை சேர்ந்த தமிழனியன் (29) என்பவர், வாதங்களையும் தனது செல்போன் மூலம் வாட்ஸ்அப் காலில் வைவ் செய்து, விஜயபாஸ்கரின் உறவினர்களுக்கு காட்டி கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் தமிழனியனை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி appeared first on Dinakaran.