மதுரை தொகுதியில் 3வது இடம் கிடைத்தது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகர் தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு டப் கொடுத்தார். அதுவும் சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் மீதான அனுதாப ஓட்டுகள் தான் விஜய பிரபாகரனுக்கு இந்த அளவுக்கு வாக்குகளை பெற்று தந்துள்ளது. அதிமுக வாக்குகள் என பெரிய அளவில் விஜய பிரபாகரனுக்கு கை கொடுக்கவில்லை என்று அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிகின்றனர்.
The post கூடாரமே காலி ஆகிறதா? அதிமுக காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகள் appeared first on Dinakaran.