பாஜ, கடந்த 9 ஆண்டுகளாக செய்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருந்ததை மறந்து விட முடியாது. குறிப்பாக, முஸ்லிம்களின் குடியுரிமையை பறிப்பதற்காக பாஜ கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் அதிமுக போட்ட வாக்குகளால்தான் நிறைவேறியது. இல்லாவிட்டால் அது சட்டமாக மாறியிருக்க வாய்ப்பில்லை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போது, நாடாளுமன்றத்தில் அதிமுக எதுவும் பேசவில்லை. இந்திய அளவில் இந்தியா கூட்டணி மிக வலுவான கூட்டணியாக விளங்கி வருகிறது. பாஜவின் தேஜ கூட்டணியில், ஒவ்வொரு கட்சியாக விலகி செல்வதால் அந்த கூட்டணி வலுவிழந்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post குடியுரிமை உள்ளிட்ட பல சட்டங்களுக்கு ஆதரவு மாநில உரிமைகளை பறிக்கும்போது வேடிக்கை பார்த்தது அதிமுக : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.