மேலும் மைதானங்கள், பரந்த சமவெளிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்த கிராம மக்களின் அழுகை சத்தம் ஆப்கான் கிராமங்களில் ஓயாமல் கேட்டுக் கொண்டே உள்ளது. ஆப்கனில் ஹெராத் மாகாணத்தில் உள்ள நைப்ரபி என்ற இடத்தில் நேற்று 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 1000த்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். உணவு, தண்ணீர், வசிப்பிடம் இன்றி திக்கற்று நிற்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்துள்ளது.
The post ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு.. தொடர் பேரழிவால் மக்கள் அச்சம்!! appeared first on Dinakaran.