இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 6ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகை கவுதமி நேரில் ஆஜராகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கினார். இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பாஜ பிரமுகர் அழகப்பன், அவரது மகன்கள் சொக்கலிங்கம், சிவஅழகப்பன், மருமகள் ஆர்த்தி, அவரது கூட்டாளிகள் ரமேஷ்சங்கர் ஷோனாய், பாஸ்கர், விசாலாட்சி, நாச்சியாள், நிலபுரோக்கர் நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி; பாஜ பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு: விரைவில் கைதாகிறார்கள் appeared first on Dinakaran.