வேதாரண்யம், டிச.3: வேதாரண்யம் பகுதியில் நேற்று காலை முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை மானாவாரி சம்பா சாகுபடிக்கு நல்ல மழை என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே வேளையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை வேதாரண்யம் தாலுகாவில் புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் , வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இரண்டாவது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.