ஊட்டி, டிச. 3: புதுக்கோட்டை சேர்ந்தவர் செல்வகுமார்(43). இவரது மனைவி சத்தியா(25). கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. செல்வகுமாருக்கு மது பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் உறவுக்காரான மாரிமுத்து(40). என்வருக்கும், சத்தியாவிற்கும் புதுக்கோட்டையில் இருந்தபோது கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு கீழ்கோத்தகிரி அம்பாள் காலனியில் வசித்து வந்தனர்.