நாகர்கோவில், டிச.1 : நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு, மிக முக்கியமான சந்திப்பு ஆகும். 4 முக்கிய சாலைகள் இதில் சந்திக்கின்றன. காலை முதல் இரவு வரை அதிக வாகன போக்குவரத்து பகுதி ஆகும். இந்த சந்திப்பில் செயல்பட்டு வந்த, டிராபிக் சிக்னல், சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணி முடிந்தும் சிக்னல் அமைக்கப்படாமல் இருந்தது. மழை மற்றும் வெயிலில் நின்றவாறு டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். வாகனங்களை நிறுத்தி அனுப்புவதிலும் கடும் சிரமமாக இருந்தது. எனவே இங்கு மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என கோரிக்ைக எழுந்தது. இதையடுத்து அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டது. நேற்று முன் தினம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் சிக்னல்கள் முறையாக இயங்கியதை தொடர்ந்து, நேற்று இந்த புதிய சிக்னலை எஸ்.பி. பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்.