கிருஷ்ணகிரியில் ₹30 கோடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறை

கிருஷ்ணகிரி, நவ.27:  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலின்போது பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள் இருப்பு வைப்பதற்காக ₹30.8 கோடி மதிப்பில் பாதுகாப்பு பெட்டக அறை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரகுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நகுலன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: